"தமிழகத்தில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக குறையும்" -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 3429
"தமிழகத்தில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக குறையும்" -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் இனிவரும் நாட்களில் பகல்நேர வெப்பநிலை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசியதால், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. இந்த நிலையில், காற்று வீசும் திசையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இருப்பினும், ஓரிரு இடங்களில் அனல்காற்று வீச வாய்ப்புள்ளது. இதனிடையே, வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் இருநாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments